இலங்கைசெய்திகள்

மனோ உள்ளிட்ட புதிய எம்.பிக்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம்

Share

மனோ உள்ளிட்ட புதிய எம்.பிக்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம்

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி (Rizvie Salih) முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பைசர் முஸ்தபா (Faiszer Musthapha), சுஜீவ சேனசிங்க (Sujeewa Senasinghe), மனோ கணேசன் (Mano Ganeshan), மொஹமட் ஸ்மைல் முத்து மொஹமட் (Muthu Mohamed) ஆகியோர் இன்று (17) இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பைசர் முஸ்தபா இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க, மனோ கணேசன், மொஹமட் ஸ்மைல் முத்து மொஹமட், ஆகியோர் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பை தொடர்ந்து புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன (Jagath Wickramaratne) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான நிசாம் காரியப்பர் நாளைய தினம் (18) பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
இலங்கை

முன்னாள் அமைச்சரால் ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலை .

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்குகள் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், அவற்றை மீண்டும் விசாரிக்குமாறு...

Featuredgughik
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர் முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள்.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா”...

இஷாரா செவ்வந்தி
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் இஷாரா செவ்வந்தி!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா...

சுரேஷ் சலே 10
இலங்கை

சுரேஷ் சலேயினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணைகள் இம்மாதம் ௨௫ ஆம் திகதி!

அரச புலனாய்வுப் பிரிவு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே யினால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத...