24 13
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி கிளிநொச்சியில் கடத்தப்பட்டதால் பரபரப்பு

Share

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி கிளிநொச்சியில் கடத்தப்பட்டதால் பரபரப்பு

யாழ்ப்பாணத்தைச்(jaffna) சேர்ந்த யுவதி ஒருவர் கிளிநொச்சியில்(kilinochchi) வைத்து கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் புன்னாலைகட்டுவன் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதியே வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கிளிநொச்சி இரணைமடுச்சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் நேற்று (16) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அழகுக்கலை நிலையத்தில் பயிற்சி பெற்று வந்தவர்

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி அழகுக்கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் நிலையில் கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்துள்ளார்.

இந்த நிலையில் வழமை போன்று குறித்த யுவதி தங்கும் இடத்துக்கு திரும்புகையில் வான் ஒன்றில் சென்ற குழுவினர் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றி சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

குறித்த யுவதியின் கைப்பை மற்றும் தொலைபேசி ஆகியன கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரம தலைமையிலான காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...