23 10
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய குடும்பத்தை அள்ளிச் சென்ற கடல் அலை

Share

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய குடும்பத்தை அள்ளிச் சென்ற கடல் அலை

இலங்கைக்கு(sri lanka) சுற்றுலா வந்த ரஷ்ய குடும்பம் நீராடச் சென்ற நிலையில் கடல் அலை இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ரஷ்யாவைச்(russia) சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் அவருடைய 39 வயதுடைய மனைவி மற்றும் 07 மற்றும் 13 வயதுடைய இரு பெண் பிள்ளைகள் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

இவ்வாறு வந்த இவர்கள் ஹிக்கடுவை கடற்கரையில் நீராடச் சென்றுள்ளனர்.இதன்போது அவர்கள் நால்வரையும் கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது.

எனினும் அங்கு கடமையில் இருந்த ஹிக்கடுவை காவல்துறை உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு குறித்த நால்வரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹிக்கடுவை காவல் நிலையத்திற்குட்பட்ட காவல்துறை உயிர்காப்பு பிரிவின் காவல்துறை பரிசோதகர் ஹேவகே, காவல்துறை கான்ஸ்டபிள் 96793 ஏக்கநாயக்க, காவல்துறை கான்ஸ்டபிள் 102748 திஸாநாயக்க மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் 105456 ஜயசிங்க ஆகியோரால் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...