Parliment in one site 800x534 1
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய அமைச்சர்கள் விரைவில் நியமனம்

Share

தான் உட்பட 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த மாதத்தி் புதிய நியமனங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இதைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனக பண்டார, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, காமினி லொகுகே, சரத் வீரசேகர, எஸ்.எம். சந்திரசேன, சி.பி. ரத்நாயக்க மற்றும் தானும் முன்மொழியப்பட்ட பெயர் பட்டியலில் அடங்குவதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதிக்கு முன்மொழியப்பட்ட பெயர் பட்டியலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பியான நாமல் ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை என்றும் திஸாநாயக்க தெரிவித்தார்.

குறித்த பட்டியல் ஏற்கனவே உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பட்டியலில் உள்ளவர்களை அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்குமாறு பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...