கொவிட் தொற்றுநோய் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நவம்பர் மாதம் 16 திகதி தொடக்கம் 30 திகதி வரை நடைமுறைக்கு வரும் சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (15) வெளியிட்டார்.
முறையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதோடு, அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் செல்லாது வீட்டிலேயே இருக்குமாறும் வைத்தியர் அசேல குணவர்தன பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களின் முறையே பரீட்சைகள் நடைபெறுவதோடு, க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மேலதிக வகுப்புகளில் 50% மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment