7 13
இலங்கைசெய்திகள்

1990 அம்புலன்ஸ் சேவைக்கு புதிய நிறம்.. சபையில் கடும் எதிர்ப்பு!

Share

1990 – சுகப்படுத்தும் அம்புலன்ஸ் சேவையின் நிறத்தை தேசிய மக்கள் சக்தி கட்சியின் நிறத்தை போல மாற்றியதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய(09.10.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இந்த 1990 – சுகப்படுத்தும் அம்புலன்ஸ் சேவை, நாட்டு மக்கள் மிகவும் விரும்பும் ஒரு சேவையாகும். அத்துடன், அந்த சேவை நாட்டு மக்களின் நம்பிக்கையையும் மரியாதயையும் பெற்றுள்ளது.

இதன்மூலம், ஒவ்வொரு நாளும் 1050 நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இன்றுவரை, நாட்டில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சேவையின் பெயர், நிறம், அதிகாரப்பூர்வ சின்னம் ஆகியவற்றை தேசிய மக்கள் சக்தியின் கட்சியின் நிறம் மற்றும் வடிவத்திற்கு ஏற்ப மாற்றும் முயற்சி நடந்து வருகின்றது.

இந்த சேவையில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், சட்டத்தில் திருத்தம் செய்யாமல் அவ்வாறு செய்ய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...