7 13
இலங்கைசெய்திகள்

1990 அம்புலன்ஸ் சேவைக்கு புதிய நிறம்.. சபையில் கடும் எதிர்ப்பு!

Share

1990 – சுகப்படுத்தும் அம்புலன்ஸ் சேவையின் நிறத்தை தேசிய மக்கள் சக்தி கட்சியின் நிறத்தை போல மாற்றியதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய(09.10.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இந்த 1990 – சுகப்படுத்தும் அம்புலன்ஸ் சேவை, நாட்டு மக்கள் மிகவும் விரும்பும் ஒரு சேவையாகும். அத்துடன், அந்த சேவை நாட்டு மக்களின் நம்பிக்கையையும் மரியாதயையும் பெற்றுள்ளது.

இதன்மூலம், ஒவ்வொரு நாளும் 1050 நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இன்றுவரை, நாட்டில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சேவையின் பெயர், நிறம், அதிகாரப்பூர்வ சின்னம் ஆகியவற்றை தேசிய மக்கள் சக்தியின் கட்சியின் நிறம் மற்றும் வடிவத்திற்கு ஏற்ப மாற்றும் முயற்சி நடந்து வருகின்றது.

இந்த சேவையில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், சட்டத்தில் திருத்தம் செய்யாமல் அவ்வாறு செய்ய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....