8 13
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் – ஒன்றிணையும் பிரதான கட்சிகள்

Share

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு நேற்று முடிவு செய்திருந்தது.

நேற்று இரவு நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் கட்சியின் பிரதிநிதிகள் இது தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்டனர்.

எனினும் இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி தரப்பிலிருந்து சில சிக்கல்கள் எழுந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனினும், முன்னதாக இந்த கலந்துரையாடல்கள் ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் தலைமையில் நடைபெற்றன.

அதற்கமைய, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு தனக்கு நெருக்கமான ஒருவருடன், இது தொடர்பில் உரையாடல் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது இரு கட்சிகளின் இரண்டு பொதுச் செயலாளர்களின் தலைமையின் கீழ் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...