இந்தியாவில் சிகிச்சை பெற உள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவில் சிகிச்சை பெற உள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

Share

இந்தியாவில் சிகிச்சை பெற உள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஆயுர்வேத சிகிச்சை மற்றும் இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக வெளிநாட்டினருக்கு புதிய வகை ஆயுஷ் விசா (Ayush Visa) அறிமுகப்படுத்தப்படுவதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சையைக் கையாளும் விசாவில், 11 ஆவது பிரிவுக்குப் பிறகு 11 ஏ என்ற பிரிவு இணைக்கப்பட்டுள்ளதுடன், தேவையான திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்திய பாரம்பரிய மருத்துவத்தை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்லும் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவதற்கான முயற்சியாகவே சிறப்பு ஆயுஷ் விசா பிரிவை உருவாக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக ஆயுர்வேதம், யோகா, மற்ற பாரம்பரிய சிகிச்சை முறைகள், பாரம்பரிய மருத்துவம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் இந்தியா சென்று மருத்துவ சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தியாவில் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் ஆயுஷ் விசா முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரபு, ஐரோப்பிய, ரஷ்ய, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளாவுக்கு சென்று வரும் நிலையில் புதிய ஆயுஷ் விசா நடைமுறைக்கு வருவதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...