back
இலங்கைசெய்திகள்

பணபரிமாற்றத்துக்கு புதிய செயலி – மத்திய வங்கியால் அறிமுகம்

Share

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பணப் பரிமாற்றம் மற்றும் பணப் பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியால் புதிய கைத்தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட இந்தப் புதிய கைத்தொலைபேசி செயலி ‘SL-Remit’ எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பணம் அனுப்புதலை ஊக்குவிக்க புதிய பணம் அனுப்பு முறைகள் மற்றும் குறைந்த செலவில் பணம் அனுப்பு முறைகள் பற்றி பரிந்துரைகளை வழங்க இலங்கை மத்திய வங்கி குழு ஒன்றை நியமித்துள்ளது.

இதில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி, கார்கில்ஸ் வங்கி , டயலொக், மொபிடெல் மற்றும் இலங்கை மத்திய வங்கியினர் நிபுணர்கள், பிரதிநிதிகள் எனப் பலர் இக்குழுவில் அடங்குகின்றனர்.

இந்தச் செயலியில் அந்நியச் செலவாணி விகிதங்கள், குறைந்த பரிவர்த்தனைக் கட்டணம், பில் கட்டணங்களைச் செலுத்தல் போன்ற பல சேவைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, இலங்கை வங்கி அதிகாரிகள் சங்கம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் லங்கா கிளியர் போன்ற பங்குதாரர்களின் உதவியுடன் இந்தச் செயலி செயற்படுத்தப்படுகிறது என இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...