676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

Share

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறியும் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோ கேரட்டை ரூ. 3,500-க்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள், காலி கட்டுகொட பகுதியில் உள்ள காய்கறிக் கடைகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு வியாபாரி ஒரு கிலோ கேரட்டைச் சந்தை விலையைவிடப் பன்மடங்கு அதிகமாக ரூ. 3,500-க்கு விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, குறித்த வியாபாரிக்கு எதிராகக் நீதிமன்றத்தில் வழக்குத் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலை காரணமாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதைச் சாதகமாகப் பயன்படுத்தி, அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக விலை நிர்ணயிக்கும் வர்த்தகர்கள் குறித்துக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...