maithripala sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

மாற்றப்பட வேண்டியவர் பிரதமரே! – அமைச்சரவையை ஏற்க முடியாது என்கிறது சுதந்திரக்கட்சி

Share

பிரதமர் பதவியில் மாற்றமின்றி இடம்பெறும் அமைச்சரவை மறுசீரமைப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல், அமைச்சு பதவியை ஏற்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

15 பேருடன் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது.

ஆளுங்கட்சியின் மூத்த உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும், சரத் வீரசேகர, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.

இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் அறிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதிய அமைச்சரவை நியமனத்தை சுதந்திரக்கட்சி எதிர்த்துள்ளது. புதிய பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு மலரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

#SriLanka News

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....