Protest L
இலங்கைசெய்திகள்

நாடு பூராகவும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்!

Share

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரிக் கொள்கை உள்ளிட்ட தற்போதைய நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று (09) முதல் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக கலாநிதி சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கமும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவிக்கும் என அதன் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் நெருக்கடி நிலை மேலும் அதிகரிக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் கலாநிதி பிரியந்த துனுசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 657a8557d51bd md
செய்திகள்இலங்கை

காய்கறி விலையில் கடும் அதீத உயர்வு: பச்சை மிளகாய் 1,000 ரூபாயைத் தாண்டியது; மக்கள் கடும் அவதி!

இலங்கையின் சில பகுதிகளில் தாழ்நிலக் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத உயர்வை எட்டியுள்ளதாகச்...

25 6943e3aa87891
செய்திகள்உலகம்

தன்னை ‘ஹீரோவாக’ காட்டிக்கொள்ள 12 நோயாளிகளைக் கொன்ற மருத்துவர்: பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு!

பிரான்சில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் மரணத்திற்கு காரணமான...

1813418 flight12
செய்திகள்இந்தியா

அடர்ந்த மூடுபனி: டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

674b2a65b606d hardik pandya in frame 191544440 16x9 1
விளையாட்டுசெய்திகள்

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி: 16 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா புதிய சாதனை!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான 5-ஆவதும் கடைசியுமான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில்...