rtjy 227 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

மகிந்தவை மகிழ்ச்சிப்படுத்த நாமலின் நடவடிக்கை

Share

மகிந்தவை மகிழ்ச்சிப்படுத்த நாமலின் நடவடிக்கை

மாலைதீவு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொலைபேசி ஊடாக உரையாடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மாலைத்தீவுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த ஜனாதிபதி ரணில், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

வாழ்த்துகள் முடிந்ததும் நாமல் ராஜபக்சவிடமிருந்து ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு சர்ப்ரைஸ் விருந்து ஒன்றை தயார் செய்துள்ளதாகவும் அதில் பங்கேற்க முடிந்தால் தந்தை மகிழ்ச்சி அடைவார் என நாமல் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜனாதிபதி ரணில், தனது பாதையை மாற்றிக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் விஜேராம இல்லத்திற்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதி ரணில் வீட்டுக்குச் சென்ற போது, ​​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குழுவினரும் அங்கு கூடியிருந்தனர்.

அவர்கள் அனைவருடனும் பிறந்தநாள் வாழ்த்துக்களில் கலந்து கொண்ட ரணில், மாலைதீவில் இருந்து வெளிநாட்டவர் ஒருவர் நிகழ்வுக்கு வந்திருப்பதாகக் கூறி அங்கிருந்து சிறிது நேரத்திலேயே வெளியேறியுள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...