பரோலில் நளினி விடுவிப்பு!!

Nalini 1

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் கடந்த 30 ஆண்டுகளாக தண்டனை அனுபவிதுத வரும் கைதியான நளினி ஒரு மாத சிறைவிடுப்பில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்

குற்றம் சுமத்தப்பட்ட முருகன் தமிழகம் -வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை அருகிலிருந்து கவனித்துக்கொள்வதற்காகத் தன் மகள் நளினியை, சிறை விடுப்பில் விடுவிக்க வேண்டும் என்று அவர் தாயார் பத்மா, சென்னை மேல்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு தமிழக அரசாங்கமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தநிலையில் நளினி ஒரு மாத சிறை விடுப்பில் இன்று (27)வெளியே வந்துள்ளார்.

Exit mobile version