இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்

Share

இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்

நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனினால் இந்தியாவில் பாரிய தொழிற்சாலையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக மாநிலத்தின் மும்மிகாட்டி என்னும் பகுதியில் இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மென்பானங்கள் உள்ளிட்ட பான வகைகளுக்கான அலுமினியம் கான்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொழிற்சாலை சுமார் 440 கோடி இந்திய ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட உள்ளதாகவும், சுமார் 26 ஏக்கர்களில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறி கர்நாடக அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

இலங்கையில் ஹொரண பகுதியில் இயங்கி வரும் சிலோன் பிவரேஜஸ் கம்பெனி நிறுவனத்தினால் தற்பொழுது 8 அளவுகளில் அலுமினியம் கேன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த மே மாதம் சிலோன் பிவரேிஸ் நிறுவனம் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மென்பான உற்பத்தியொன்றை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...