24 66486f1836db4 1
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்கால் துயரத்தை கண்முன்னே கொண்டு வந்த நிகழ்வு

Share

முள்ளிவாய்க்கால் துயரத்தை கண்முன்னே கொண்டு வந்த நிகழ்வு

தனி நாடு கோரிய 3 தசாப்த உரிமைப் போராட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு மிகக் கொடூரமான முறையில் முடிவுறுத்தப்பட்டது.

உயிரைக் காத்துக் கொள்ள, உணவைப் பெற்றுக்கொள்ள, உறவுகளை காப்பாற்றவென்று அப்போது முள்ளிவாய்க்கால் மண்ணெங்கும் ஓடித்திரிந்தது தமிழினம்.

கண் முன்னே, தாயின் உயிர் பிரிந்ததையும், தான் பெற்ற பிள்ளையின் கை கால்கள் சிதறுண்டதையும், பாலுக்காய் தாயின் மார் தேடிய பச்சிளம் ஒன்று தாயின் உயிர் பிரிந்தது தெரியாமல் துடித்ததையும் எங்கணம் மறப்பது.

நாளை, எம் தாய்நாடு என்ற வேட்கையுடன் தன்னை அர்ப்பணித்து களமாடிய வீரர்களின் கண் முன்னே அந்த தாயகக் கனவு சிதைந்த கொடூரத்தின் வேதனையையும் எப்படி மறப்பது.

இப்படி துயரங்களை மட்டுமே கொடுத்த அந்த கொடூர நினைவுகளை சுமந்து இன்றும் முள்ளிவாய்க்கால் மண்ணில் கண்ணீர் சிந்தி கதறுகின்றது தமிழினம்.

அன்று கண்ட வேதனைகளை இன்றும் மீண்டும் மீட்டிப் பார்க்கும் வகையில், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளின் போது இளையவர்கள் ஒன்றிணைந்து கண்முன்னே கொண்டு வந்திருந்தனர்.

வரலாறு எமக்கு கொடுத்த துயரங்களை மீண்டுமொரு முறை மீட்டிப் பார்க்கும் தருணம் இது,

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...