24 661a0f2d75261
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share

பண்டிகைக் காலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பண்டிகைக் காலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கவனயீனமாக வாகனம் செலுத்துதல் மற்றும் குடிபோதையில் வாகனம் செலுத்துதல் போன்றவற்றினால் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வேகமாக வாகனம் செலுத்துதல், கவனயீனமாக வாகனம் செலுத்துதல் மற்றும் மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கு விசேட பிரிவுகள் நாடு முழுவதிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் முதல் மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...

சேனக்க பல்லேதென்ன
இலங்கை

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர்!

சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக இன்று முதல் அமுலுக்கு...

கொத்மலை
இலங்கை

திறக்கப்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

இன்றைய தினம் மாலை 7.00 மணிக்கு, கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை...