கோட்டாபய 2 1000x600 1
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவுக்கு எதிரான பிரேரணை: விவாத முயற்சி தோற்கடிப்பு!

Share

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சி ஆளுங்கட்சியால் தோற்கடிக்கப்பட்டது.

ஜனாதிபதிக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்குக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பை வெளியிட்டது.

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதற்காக, நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்தும் யோசனையை எதிரணியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்தார். அதனை ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. லக்‌ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்தார்.

இந்த யோசனைக்கு ஆளுங்கட்சி உடன்படவில்லை. நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார். இதையடுத்து சுமந்திரனின் யோசனை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது நிலையியல் கட்டளையை இடைநிறுத்த ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றதால் ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை விவாதத்துக்கு வரவில்லை.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 10
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய வரைபடம்: கடல் எல்லைக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறதா ஐ.ஆர்.ஜி.சி?

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ்...

world 9
செய்திகள்உலகம்

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கைக்கு அரசமுறைப் பயணம்!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To...

world 8
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்!

ஹோர்முஸ் ஜலசந்திக்குள் (Strait of Hormuz) நுழைய முயன்ற எதிரிப் போர்க்கப்பல்களை “விரைவான மற்றும் தீர்க்கமான...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாட்ஸ்அப் காணொளி அழைப்பு மோசடி: இலங்கையர்களுக்கு கணினி அவசரகால ஆயத்தக் குழு எச்சரிக்கை!

இலங்கையர்களை இலக்கு வைத்து வாட்ஸ்அப் (WhatsApp) தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் புதிய வகை காணொளி அழைப்பு...