20 6
இலங்கைசெய்திகள்

வேலை தருவதாக சமூக வலைத்தளங்களில் பண மோசடி : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Share

வேலை தருவதாக சமூக வலைத்தளங்களில் பண மோசடி : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

வேலை வழங்குவதாக கூறி சமூக வலைத்தளங்களில் பண மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

வேலை அல்லது வேறு நடவடிக்கைகள் தொடர்பில் மக்களின் இரகசிய தகவல் பெறப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இதுபோன்ற செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத அணுகல் தொடர்பாக கடந்த வாரம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹேக்கர்கள் வாட்ஸ்அப் கணக்குகளில் நுழைந்து பெரும்பாலும் நிதி மோசடியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளதாகவும் இதுபோன்ற சுமார் 74 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...