24 666140b3d7324
இலங்கைசெய்திகள்

மோடியின் வெற்றியால் இந்தியாவிற்கு அடிமையாகும் இலங்கை

Share

மோடியின் வெற்றியால் இந்தியாவிற்கு அடிமையாகும் இலங்கை

நடந்து முடிந்த இந்திய (India) நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இலங்கையை (Sri Lanka) மேலும் அடிமை நாடாக மாற்றவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை மறுதினம் (08) மூன்றாவது தடவையாக பிரதமராக நரேந்திர மோடி (Narendra Modi) பதவியேற்கவுள்ளார்.

நரேந்திர மோடியின் பதவி நீடிப்பு இலங்கையின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பிரிவின் கலாநிதி அதுலசிறி சமரகோன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சமகாலத்தில் இலங்கை மீது இந்தியா செலுத்தும் அழுத்தம் மேலும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டுக்குள் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) இதுவரை இணைந்து செயற்பட்டுள்ளதுடன் இந்தக் காலப்பகுதி இலங்கையின் பொருளாதாரம் இந்தியாவின் ஆதிக்கத்திற்குள் சிக்கியுள்ளது.

அத்தோடு, இலங்கையின் முதலீட்டு வலையமைப்புகள் பல இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு திருகோணமலை (Trincomalee) எண்ணெய் குதம் உட்பட பல்வேறு முதலீடுகள் இந்தியாவின் கைகளில் உள்ளதோடு இந்த நிலைமையே எதிர்காலத்திலும் தொடரும்.

இதனடிப்படையில், இது பொருளாதார ரீதியில் இலங்கையில் மிக்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...