கண்டி – பூஜாப்பிட்டிய பொலிஸ் பிரிவிலுள்ள பட்டுகொட என்ற இடத்தில் வசித்து வந்த திருமணமாகாத மேற்படி பெண், அவரது சகோதரரியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சம்பவ தினம் அவரைக் காணாது உறவினர்கள் தேடியுள்ளனர். அதன்போதே அவர் சடலமாக கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டார்.
இவர் தொடர்ந்து மனநிலை பாதிப்பிற்கு வைத்திய சிகிச்சை பெற்றவர் எனத் தெரிய வருகிறது. இவர் 52 வயதுடைய திருமணமாகாத சந்திமா ஜானகி விஜேசேக்கர என்பவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாக பூஜாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
#srilankaNews
Leave a comment