Dayasiri Jayasekara
அரசியல்இலங்கைசெய்திகள்

நிபந்தனைக்கு கட்டுப்பட்டாலே சந்திப்பு! – சுதந்திரக் கட்சி விடாப்பிடி

Share

தமது கட்சியால் விடுக்கப்பட்டுள்ள நிபந்தனையை ஜனாதிபதி ஏற்காதபட்சத்தில், அவர் தலைமையில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசிலிருந்து வெளியேறி, சுயாதீனமாக செயற்படும் முடிவை கடந்த 05 ஆம் திகதி சுதந்திரக்கட்சி எடுத்தது.

எனினும், அக்கட்சியின் சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் அரசுக்கு ஆதரவு வழங்கி, இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டனர்.

இவ்விருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குமாறும், அவ்வாறு இல்லாவிட்டால் நாளை(29) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் கலந்துகொள்ளாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசு அமைப்பது சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்காக அரச மற்றும் சுயாதீன அணிகளுக்கு ஜனாதிபதி நாளை அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...