22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Share

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம் 2 ஆம் திகதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளாட்சி ஆணையாளர் வாக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளாட்சி சபை தேர்தல் முடிவுகளுக்கமைய, எந்தக் கட்சியும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாமையினால் இவ்வாறான வாக்கெடுப்பின் தேவை ஏற்பட்டுள்ளது.

அதற்கைமய, உள்ளாட்சி ஆணையரால் நடத்தப்படும் வாக்கெடுப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் ஆளும் தரப்பு அல்லது எதிர்க்கட்சி வேட்பாளர், மேயராக வருவதற்கான வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

உள்ளூராட்சித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியில் கொழும்பு மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 48 ஆகும்.

.ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகளின் சார்பில் 69 உறுப்பினர்கள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...