food mb
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்க ஒருவேளை உணவை தியாகம் செய்யுங்கள்!!!

Share

நாட்டில் அடுத்து வருகின்ற நாள்களில் ஒரு வேளை உணவை தியாகம் செய்யவேண்டிய நிலை நாட்டு மக்களுக்கு ஏற்படலாம்

இதனை நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயத்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு தற்போது முடக்கப்பட்டுள்ளது. நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் இருந்து மக்கள் இவ்வாறு ஒரு வேளை உணவை தியாகம் செய்வதன் மூலம் கொரோனா அலையைக் கட்டுப்படுத்த முடியும்.

அத்துடன் நாட்டையும் எதிர்கால சந்ததியினரையும் அடுத்த கட்டம் நோக்கி அழைத்துச் செல்லக் கூடியதாக அமையும்.

எனவே மூன்று வேளை உணவு உண்டு வந்தவர்கள் அடுத்து வருகின்ற சில நாள்களில் இருவேளை உணவு உண்ண வேண்டிய நிலை வரலாம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தியாகங்களை செய்தே வருகின்றனர்.

நாட்டின் தேசிய உற்பத்திகளை காக்கவும் ஊக்குவிக்கவுமே இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நாட்டில் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உள்ளாடைகளை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.

இதேவேளை இவரின் இந்தக் கருத்துக்கு பல தரப்புக்களிலுமிருந்தும் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. அத்துடன் சமூக வலைத்தளங்கள் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...