மே தினப் பேரணிகள்
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாடெங்கும் மே தினப் பேரணிகள்!

Share

மே தினத்தையொட்டி பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நாட்டின் பல பகுதிகளில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் என்பவற்றை ஏற்பாடு செய்துள்ளன.

இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நுகேகொடை ஆனந்த சமரகோன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக்கூட்டம் இந்த முறை சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த 26ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் ஆரம்பித்த பேரணி இன்று நிறைவடையவுள்ளது.

குறித்த பேரணி சுதந்திர சதுக்க வளாகத்தை சென்றடையவுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் மே தினக் கூட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் கொழும்பிலுள்ள பிரதான கட்சி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் புதிய நகர மண்டப வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் ஜே.வி.பி. இன்று 4 இடங்களில் மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. அதன் பிரதான மே தின ஊர்வலம் இன்று பிற்பகல் மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன விளையாட்டரங்கில் ஆரம்பமாகி பிற்பகல் 3 மணியளவில் கொழும்பு – கோட்டையை வந்தடையவுள்ளது.

இது தவிர, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் மாத்தறை ஆகிய இடங்களிலும் ஜே.வி.பியின் மே தினக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இதற்காகக் கட்சியின் தோட்டத் தலைவர்கள், தலைவிகள் மற்றும் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பன அந்தந்தத் தோட்டங்களிலும் பிரதேசங்களிலும் மே தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான மே தினக் கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

இது தவிர நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல ஆர்ப்பாட்டங்களும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...