பேருந்து ஆற்றில் விழுந்தமைக்கான காரணம் வெளியானது
இலங்கைசெய்திகள்

பேருந்து ஆற்றில் விழுந்தமைக்கான காரணம் வெளியானது

Share

பேருந்து ஆற்றில் விழுந்தமைக்கான காரணம் வெளியானது

மன்னப்பிட்டியில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானமை குறித்து நாடு பூராகவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சாரதியின் கவனயீனம், பணத்திற்காக அனுமதிக்கும் பொலிஸார், பேருந்தினை பரிசோதிக்காத அதிகாரிகள் என பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கதுருவலையில் இருந்து பத்து நிமிடங்கள் பயணித்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பேருந்து மிகவும் வேகமாக சென்றமையினால் பேருந்திலுள்ள பிரதான பாகம் ஒன்று உடைந்தமையினாலேயே பேருந்து ஆற்றில் வீழ்ந்ததாக முதற்கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

பேருந்து அதிவேகமாக பயணித்த போது வீதியில் குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த நிலையில் பேருந்து பாலத்திற்கு அருகில் பேருந்தின் பாகம் உடைந்தமையினால் பேருந்து மேல்நோக்கி பயணித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாகம் உடைந்த பேருந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பாலத்தில் இருந்து ஓடையில் விழுந்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதுடன் மோட்டார் பரிசோதகரும் விசாரணைகளை மேற்கொள்வார் என பொலன்னறுவை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

பேருந்தை அஜாக்கிரதையாக அதிவேகமாக செலுத்தியதாலேயே விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதி சந்திவெளியைச் சேர்ந்த நடராஜா வினோத் ராஜ் என்பவரை நேற்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் பாத்திமா வின்னா உத்தரவிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...