சி.பி.ரத்நாயக்க
அரசியல்இலங்கைசெய்திகள்

எந்தச் சந்தர்ப்பத்திலும் மஹிந்த பதவி விலகார்! – சி.பி. திட்டவட்டம்

Share

“எமது தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச எந்தச் சந்தர்ப்பத்திலும் பதவி விலகமாட்டார்.”

– இவ்வாறு முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

பிரதமரைப் பதவி விலகக் கோரும் சுயாதீன எம்.பிக்கள், தேர்தல் மேடைகளில் அவரின் படத்தை ஏந்தியவாறு பிரசாரம் செய்துதான் வெற்றியடைந்தார்கள் என்பதை மறக்கக்கூடாது எனவும் அவர் நினைவுபடுத்தினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதேச சபைத் தவிசாளர்கள், நகர சபைத் தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரத்நாயக்க எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்துவதில் சிலர் குறியாகவுள்ளனர். அவர்களின் சுயலாப அரசியல் எளிதில் எடுபடாது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலிருந்து எவர் வெளியேறினாலும் எமது கட்சி பலம் இழக்காது.

எமது தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கைகளை நாம் தொடர்ந்து பலப்படுத்துவோம். அவரைப் பதவி விலகக் கோர எவருக்கும் உரிமை இல்லை.

கொடிய பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்ட ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்சவே” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 76
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து: எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு, இலங்கை...

world 70
செய்திகள்இந்தியா

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக...

world 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு கூடுதல் உர மானியம்: அமைச்சர் சமந்தா வித்யரத்ன

இலங்கையில் உள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிகமாக 5,000 ரூபாய் உர மானியம் வழங்க...

world 74
செய்திகள்உலகம்

காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ: உலகளவில் காட்டுத்தீ அபாயம் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

காலநிலை மாற்றம் மற்றும் ‘எல் நினோ’ (El Nino) வானிலை நிகழ்வுகளால் இந்த ஆண்டு ஆப்பிரிக்கா,...