mahinda 1
இலங்கைசெய்திகள்

மஹிந்த இத்தாலி பயணம் – பாப்பரசரை சந்திக்கமாட்டார்!

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்,

இத்தாலியிலுள்ள போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ஐரோப்பிய மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக அடுத்த வார இறுதியில் இத்தாலி செல்லவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர், பிரதமர் புனித வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்தித்து, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் உட்பட்ட பல விடயங்கள் பற்றிய விசாரணையின் முன்னேற்றம் பற்றி விளக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திக்கவுள்ளார் என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.

போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டே பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது என பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...