13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சிங்கள மகா நாயக்கர்கள்

Share

சமகால அரசாங்கம் பாலின வாழ்க்கையை முறையை ஊக்குவிப்பதாக மகா நாயக்க தேரர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

கண்டி மல்வத்து, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமஞ்ச பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஒன்றிணைந்து இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

பாலின வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது சிங்கள பௌத்த கலாசார விழுமியங்களைப் பலவீனப்படுத்தும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகள் மனித உரிமைகள் என்ற பெயரில் சமூக நெறிமுறைகளை சிதைக்கும் செயற்பாடுகள் என்றும் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, குற்றவியல் சட்டத்தின் 82 ஆம் பிரிவில் உடல் தண்டனையை சட்டவிரோதமாக்க முன்மொழியப்பட்ட திருத்தத்துக்கும் மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த செயற்பாடுகளை பொது விவாதம் இன்றி இது இளைஞர்களின் ஒழுக்கத்தைக் குறைக்கும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

தன்பாலின சேர்க்கை என்பது பௌத்த போதனைகளுக்கு எதிரானது எனவும் இது சமூகத்துக்கு மீள முடியாத தீங்கு விளைவிக்கும் என வலியுறுத்தியுள்ளனர்.

சட்டங்களை இயற்றும் போது சிங்கள பௌத்த மரபின் விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...