tamilni 137 scaled
இலங்கைசெய்திகள்

சுமந்திரன் மேற்கொண்டுள்ள நடவடிக்கை

Share

சுமந்திரன் மேற்கொண்டுள்ள நடவடிக்கை

மட்டக்களப்பு – மாதவனை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைவழக்கு தொடர்பில் கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் மேலதிக நடவடிக்கைகளை சுமந்திரன் மேற்கொண்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை M.A சுமந்திரன் ஊடாக நேற்று(11.10.2023) சாட்சியங்களை சமர்ப்பித்துள்ளார் என சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் போது சாணக்கியன் , கோ.கருணாகரம், சுமந்திரன் போன்றவர்களால் 2022 ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நேற்றைய தினம் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் சாணாக்கியன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீதி கோரி 27 தினங்களாக பண்ணையாளர்கள் வீதியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நீதிமன்ற கட்டளை இருந்தும் அத்துமீறிய பெரும்பான்மை இனத்தவர்களின் நில அபகரிப்பு இன்றும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றமை கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
vellam
இலங்கை

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் – கவலையில் மக்கள்

ஹட்டன் – டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள், மத்திய மலைநாட்டில் பெய்து...

பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...