tamilni 138 scaled
உலகம்செய்திகள்

காசாவிலிருந்து பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸின் காணொளி

Share

காசாவிலிருந்து பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸின் காணொளி

ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் படையணியால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளில் பெண் ஒருவரையும், இரண்டு குழந்தைகளையும் விடுவிக்கும் காணொளி ஒன்றை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட பெண் ஒரு இஸ்ரேலியர் என கஸ்ஸாம் படையணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – காசா எல்லை வேலிக்கு அருகில் உள்ள ஒரு திறந்த வெளியில் இந்த மூவரையும் ஆயுதம் தரித்த இரு போராளிகள் விட்டுவிட்டுச் செல்வதை காணொளி காட்டுகிறது.

எனினும் இது தொடர்பில் இஸ்ரேலிய அதிகாரிகள் எதுவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

இக்காட்சிகள் இஸ்ரேலால் தடைசெய்யப்பட்ட சர்வதேச தொலைக்காட்சி ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலிய ஊடகங்கள் இந்த விடுவிப்பு முன்பே நடந்ததாகக் கூறுகின்றன.

மேலும், சிலர் இந்த விடுவிப்பு கடந்த சனிக்கிழமையன்று நடந்ததாகவும், ஹமாஸ் அமைப்பானது தனது சர்வதேச மரியாதையை உயர்த்த முயற்சிப்பதாகவும் கூறுகிறார்கள்.

இஸ்ரேல் மீதான முன்னோடியில்லாத தாக்குதலின் போது சனிக்கிழமையன்று 150 கைதிகள் ஹமாஸால் கைதுசெய்யப்பட்டனர்.

இச்செயலால் காசா மீது போரை இஸ்ரேல் அறிவிக்க வழிவகுத்தது. இந்நிலையில், ஐந்து நாட்களில் இடைவிடாத குண்டுவெடிப்பானது காசாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உட்பட 1,050 க்கும் மேற்பட்டவர்களைக் பலியாக்கியது என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், 5,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் முழு முற்றுகையின் கீழ் உள்ள பாலஸ்தீனிய பகுதியில் 250,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இது ஒரு “மனிதாபிமான பேரழிவு” என்று சர்வதேச ஆய்வாளர்களின் கருத்துக்களில் வெளிப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேலில் சனிக்கிழமை முதல் 155 படை வீரர்கள் உட்பட 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...