11 4
அரசியல்இலங்கைசெய்திகள்

சுமந்திரன்-சஜித் இடையில் நடந்த டீல் என்ன! மாவை பகிரங்கம்

Share

சுமந்திரன்-சஜித் இடையில் நடந்த டீல் என்ன! மாவை பகிரங்கம்

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் தொடர்பான புது புது அறிவிப்புக்களும், வேட்பாளர்களின் வாக்குறுதிகளும், அடுத்த ஜனாதிபதிக்கான தமது ஆதரவு தொடர்பான கட்சிகளின் நிலைப்பாடுகளும் நாளுக்கு நாள் பல எதிர்பார்ப்புகளை தோற்றுவிப்பதாகவே அமைகின்றன.

இந்த ஜனாதிபதி தேர்தல் அடுத்த பல வருடங்களுக்கான இலங்கையின் தலையெழுத்தை நிர்ணயிப்பதாக அமையும் அதேவேளை தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான மற்றுமொரு வாய்ப்பாகவே பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கருதப்படும் தமிழரசு கட்சியின் உறுப்பினர்களின் தீர்மானம் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதில் முக்கியமாக பார்க்கப்படுவது ஒரு கட்சியின் தீர்மானம் அந்த கட்சியின் தலைவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்து.

தமிழரசு கட்சியின் தீர்மானத்துக்கான மூல கர்த்தா நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் என்பது பலர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு.

இந்நிலையில் சுமந்திரனின் நகர்வுகள் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சியின் ஆதரவு ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு என அறிவித்துள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...