high court
அரசியல்இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் – மனு இன்று பரிசீலனை

Share

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு, இன்றையதினம் (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மனுகுறித்த அடுத்த கட்ட பரிசீலனை பெப்ரவரி 23ஆம் திகதி இடம்பெறும் என்று பெப்ரவரி 10ஆம் திகதியன்று நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் தனது மனுவை முன்னைய திகதியில் அழைக்குமாறு ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் தனது சட்டத்தரணிகள் ஊடாக, கடந்த 14ஆம் திகதி கோரிக்கை விடுத்தமைக்கு அமைய, மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நீதியரசர்களான எஸ்.துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள், பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக பெயரிட்டு, ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் இந்த மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முழு நாடும் நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் பொது மக்கள் மீது சுமையை ஏற்படுத்தும் என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறைந்தது 1000 கோடி ரூபாயை 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து தேர்தலுக்காக ஒதுக்க வேண்டி வரும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தேர்தல் ஆணைக்குழுவிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு இவ்வளவு தொகை கிடைக்குமா என்ற கேள்விக்கு, வருமானம் மற்றும் கடன்வாங்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே பணி முன் செலவு நிதியை விடுவிப்பதாக அமையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் மீது தேவையற்ற செல்வாக்கை செலுத்த முயல்வதாகவும் அரசியல் நோக்கங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களினால் சீர்குலைக்கும் காரணிகள் இருப்பதாகவும் மனுதாரர் அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...