Provincial Council election
அரசியல்இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது??

Share

எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதியன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்திக் கூறுகள் காணப்படுவதாக அறியமுடிகிறது.

குறித்த தினத்தில் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அரசியல் கட்சிகளின் செயலாளார்கள் விடுத்துள்ள அறிவிப்புகள் மூலம் தெரியவருகிறது.

தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளை இன்று (15) விநியோகிக்க முடியாது என்று கட்சியின் பொதுச் செயலாளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்ற சந்திப்பில் அறிவித்துள்ளார்.

உரிய பணம் செலுத்தப்படும் வரை வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படமாட்டாது என்று அரசாங்க அச்சக திணைக்களம் தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, தபால் மூல வாக்களிப்புக்குத் தேவையான வாக்குச் சீட்டுகள் தொடர்பான பிரச்சினையை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்கொண்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுமாறும் பின்வாங்க வேண்டாம் என்று ஆணைக்குழுவின் தலைவரிடம் கூறியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் இருந்து வெளியேறுகையில் மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்த அவர், சட்டமா அதிபரிடம் இருந்து தனக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றும் மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்ததாக மத்தும பண்டார எம்.பி குறிப்பிட்டார்.

இதேவேளை, நிதி பிரச்சினைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்க்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று ஆணைக்குழுவின் சந்திப்பின் மூலம் தெரியவருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவும்
தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...