image 79eff1ea2f
இலங்கைசெய்திகள்

முதலில் சீனாவுக்கு எம்பிக்களை ஏற்றுங்கள்!! – சுற்றுச்சுழல் ஆர்வலர் கோரிக்கை

Share

முதலில் சீனாவுக்கு எம்பிக்களை ஏற்றுங்கள்!! – சுற்றுச்சுழல் ஆர்வலர் கோரிக்கை

உயிரோடு இருக்கும் குரங்குகளின் மூளையை உண்பதற்காகவே அரசாங்கம் 100,000 குரங்குகளை சீனாவுக்கு அனுப்பத் திட்டமிடுவதாக தங்களால் நடாத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் அறியக் கிடைத்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலரான நயனக்க ரன்வெல்ல, கொழும்பு ஊடக சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார்.

”இலங்கையின் வனஜீவராசிகள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் இலங்கையிலிருந்து பணமீட்டும் நோக்கத்துடன் விலங்குகளை ஏற்றுமதி செய்ய முடியாது.

விலங்குகளை ஏற்றுமதி செய்வது அந்நிய செலாவணியைப் பெற உதவாது. இந்த செயற்பாடுகளின் பின் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை உயர் அதிகாரி ஒருவரின் மனைவி இருக்கின்றார்” என ரன்வெல்ல தெரிவித்தார்.

“குரங்குகளின் மூளையை சமைக்காமல் பச்சையாக உண்ணும் விசேட உணவுத் தயாரிப்பு முறைமையொன்று சீனாவில் முன்னெடுக்கபட்டு வருகின்றது. அத்துடன் அமெரிக்காவிலிருந்தும் பெருமளவு எண்ணிக்கையிலான குரங்குகளை கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்தக் குரங்குகளின் உடல் கட்டமைப்பு மனிதர்களை ஒத்ததாகும். எனவே அவை இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவ பரிசோதனைக் கூடங்களில் உபயோகிக்கப்படலாம்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

“குரங்குகளை ஏற்றுமதி செய்ய வேண்டாம். அதற்குப் பதிலாக நாட்டை சீர்குலைத்த பாராளுமன்ற அங்கத்தவர்களை ஏற்றுமதி செய்யுங்கள்“ என ரன்வெல்ல அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் குரங்குகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுகிறது. ஆனால் அதற்கு குரங்கு ஏற்றுமதி தீர்வல்ல. பயிர்களைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகளை ஏற்கனவே நாம் சமர்ப்பித்துள்ளோம். ஆனால் அரசாங்கத்திலுள்ள யாரும் அதைக் கவனிக்கத் தயாராக இல்லை என ரன்வெல்ல தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...