WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுடன் இணையோம்! – கூறுகிறார் ஜயசேகர

Share

” இது சர்வக்கட்சி அரசு கிடையாது. எனவே, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது அரசாங்கத்தில் இணையாது. அமைச்சு பதவிகளை பொறுப்பேற்காது.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சர்வக்கட்சி அரசை நிறுவுமாறு நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். எனினும், அமையப்பெற்றுள்ள அரசானது சர்வக்கட்சி அரசு அல்ல. உறுப்பினர்களை வளைத்துபோட்டு அமைக்கப்பட்ட தொங்கு நிலை அரசாகும். இவ்வாறான அரச கட்டமைப்பில் இணைய மாட்டோம்.

எனினும், நாட்டு மக்களின் நலன்கருதி, வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு வழங்கப்படும். முறையாக சர்வக்கட்சி அரசு உருவாக்கப்பட்டால், அரசில் இணைந்து பங்களிப்பு வழங்கப்படும். அத்துடன், எதிரணியில் இருந்து 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு சுதந்திரக்கட்சி ஆதரவு வழங்கும்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...