Ramesh pathirana 75
இலங்கைசெய்திகள்

வெளியக பொறிமுறையை ஏற்கோம்!

Share

” வெளியக பொறிமுறையை ஏற்பதில்லை என்பதுதான் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதனையே வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாவில் அறிவித்தார்.”

இவ்வாறு பதில் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது, ” ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர், வெளியக பொறிமுறையை நிராகரித்துள்ளார். ஆனால், நல்லாட்சியின்போது இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானத்தில் கலப்பு பொறிமுறை இருந்தது. அப்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தார். தற்போது அவர் ஜனாதிபதியாக இருக்கின்றார். வெளிவிவகார அமைச்சரின் அறிவிப்பு அரசாங்கத்தின் நிலைப்பாடா” என்ற தொனியில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ரமேஷ் பத்திரண இவ்வாறு கூறினார்.

” வெளியக பொறிமுறையை நாம் ஏற்கப்போவதில்லை. அது எமது அரசமைப்புக்கு முரணான செயல். எமது அரசமைப்புக்கு உட்பட்ட வகையில் உள்ளக பொறிமுறை ஊடாகவே நடவடிக்கை இடம்பெறும். எமது ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுதான். அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டையே வெளிவிவகார அமைச்சர் அறிவித்தார்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...