Ramesh pathirana 75
இலங்கைசெய்திகள்

வெளியக பொறிமுறையை ஏற்கோம்!

Share

” வெளியக பொறிமுறையை ஏற்பதில்லை என்பதுதான் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதனையே வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாவில் அறிவித்தார்.”

இவ்வாறு பதில் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது, ” ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர், வெளியக பொறிமுறையை நிராகரித்துள்ளார். ஆனால், நல்லாட்சியின்போது இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானத்தில் கலப்பு பொறிமுறை இருந்தது. அப்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தார். தற்போது அவர் ஜனாதிபதியாக இருக்கின்றார். வெளிவிவகார அமைச்சரின் அறிவிப்பு அரசாங்கத்தின் நிலைப்பாடா” என்ற தொனியில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ரமேஷ் பத்திரண இவ்வாறு கூறினார்.

” வெளியக பொறிமுறையை நாம் ஏற்கப்போவதில்லை. அது எமது அரசமைப்புக்கு முரணான செயல். எமது அரசமைப்புக்கு உட்பட்ட வகையில் உள்ளக பொறிமுறை ஊடாகவே நடவடிக்கை இடம்பெறும். எமது ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுதான். அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டையே வெளிவிவகார அமைச்சர் அறிவித்தார்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...