செய்திகள்அரசியல்இலங்கை

இந்து சமுத்திர மாநாட்டில் தலைமை உரை: கோட்டாபய ராஜபக்ச!!

unnamed 1 2
Share

இந்து சமுத்திர மாநாட்டில் தலைமை உரையாற்றுவதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் அடுத்த மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் தலைமை உரையாற்றுவதற்காக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சசெயற்படுவதுடன், உப தலைவர்களாக இந்தியா, சிங்கப்பூர், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த வருடத்துக்கான தொனிப்பொருள்“ சுற்றாடல், பொருளாதாரம் மற்றும் தொற்று” என தெரிவித்த அவர், இந்த மாநாடானது இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமையவுள்ளது

இலங்கை கொரோனா தொற்று மற்றும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி என்பவற்றின் பின்னணியில் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் மற்றும் நாம் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில், குறித்த இரண்டு அதிகாரிகளிடமும் விரிவான காரணங்களை முன்வைக்க இது ஒரு பயனுள்ள சந்தர்ப்பமாக
அமைந்தது என குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...