24 663e28dec703f
இலங்கைசெய்திகள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

Share

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களது கொடுப்பனவுகள் பாரியளவில் அதிகரிக்கப்பட உள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இந்த அதிகரிப்பு தொடர்பில் அறிவித்துள்ளது.

கிரிக்கெட் வீரர்களின் நலன்புரி மற்றும் ஊக்கக் கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் ஏ அணி ஆகியனவற்றில் விளையாடி வரும் 41 வீரர்களுக்கு ஆறு தர நிலைகளின் அடிப்படையில் கொடுப்பனவு நிர்ணயிக்கப்பட உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றில் விளையாடுவதற்காக வீரர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை 100 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணிக்காக வழங்கும் பங்களிப்பு மற்றும் போட்டியில் வெளிக்காட்டும் திறமையின் அடிப்படையில் கொடுப்பனவு தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ரி20 போட்டிகளில் விளையாடும் வீரர்களின் போட்டிக் கட்டணம் 25 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தர வரிசையின் அடிப்படையிலான அடைவுகளுக்கும் கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த துடுப்பாட்டவீரர் மற்றும் சிறந்த களத் தடுப்பாளர், தர வரிசையில் 2 முதல் 10ம் இடத்தை வகிப்பவர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...