tamilni 501 scaled
இலங்கைசெய்திகள்

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Share

நிலவும் கடும் மழை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (29.12.2023) மதியம் 02.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பதுளை மாவட்டத்தின் பதுளை, ஹாலி அல, பண்டாரவளை, சொரணதோட்டை, பசறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவுக்கும், லக்கல மற்றும் பல்லேகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவட்டத்தின் மெதகமை பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் வலப்பனை பிரதேசத்திற்கும் விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலத்தில் விரிசல், பள்ளங்கள், ஆழமான வேர்கள், சாய்ந்த மரங்கள், மின்கம்பங்கள், சாய்ந்த தொலைபேசி கோபுரங்கள் போன்றவை இருந்தால் அந்த இடங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
tax us
இலங்கை

அமெரிக்கா வழங்க போகும் வரப்பிரசாதம்.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து...

Expired Medical
இலங்கை

பிரபல தனியார் மருந்தகங்களில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம்.

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ...

arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...