EGG 1
இலங்கைசெய்திகள்

முட்டைக்கு தட்டுப்பாடு!

Share

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சந்தையில் முட்டை விலை உயர்ந்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

சிவப்பு முட்டை ஒன்று 55 ரூபாக்கும், வெள்ளை முட்டை 54 ஒன்று ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் சந்தையில் முட்டைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பல்பொருள் அங்காடிகளில் பத்து முட்டைகள் கொண்ட ஒரு பொதி 660 ரூபாய் தொடக்கம் 680 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அண்மைய நாட்களாக முட்டை விலை கடுமையாக உயர்ந்து வந்த காரணத்தினால், அதை கட்டுப்படுத்த அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்தது.

எனினும், விலங்குணவு இறக்குமதி மற்றும் கோழி இறக்குமதி குறைந்துள்ள காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எதிர்வரும் பண்டிகைக் காலம் மற்றும் அடுத்த வருடத்தில் முட்டைத் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை உயர்ந்து செல்கின்றமை மற்றும் தட்டுப்பாடு நிலவும் காரணத்தினால் சந்தையில் முட்டை விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...