download 5 2
இலங்கைசெய்திகள்

கந்தகாடு மோதல்! – 13 பேர் மாயம்

Share

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் அண்மையில் இடம்பெற்ற மோதலின் போது தப்பிச் சென்ற 13 கைதிகள் இதுவரை சரணடையவில்லை என பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த 6ஆம் திகதி இரவு ஏற்பட்ட மோதலின் போது 50 தொடக்கம் 100 வரையான கைதிகள் முகாமிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மோதலின் பின்னர் இதுவரை 301 கைதிகள் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

மோதலில் ஈடுபட்ட 215 கைதிகள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மோதலின் போது தப்பியோடிய 14 கைதிகள் புலதிசிபுர மற்றும் சேருநுவர பொலிஸ் நிலையங்களில் இருப்பதாகவும், காயமடைந்த 04 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பிரிகேடியர் ரவி ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.

எனினும், தப்பியோடிய 13 கைதிகள் இன்னும் சரணடையவில்லை.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...