rtjy 294 scaled
இலங்கைசெய்திகள்

மக்கள் விடுதலை முன்னணி முன்னாள் உறுப்பினர் நீரில் மூழ்கி பலி

Share

மக்கள் விடுதலை முன்னணி முன்னாள் உறுப்பினர் நீரில் மூழ்கி பலி

களுத்துறை, மீகதென்ன – வல்லாவிட உள்ளூராட்சி சபையில் மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பிரதேசத்தில் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெலிபன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வலல்லாவிட்ட, போபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய ஐ.ஏ.வீரசிறி என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர் வெலிப்பன்ன, ஊராகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு சென்றிருந்த போதே அவர் காணாமல் போனமை தொடர்பில், நேற்று முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அருகில் உள்ள கால்வாயில் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...