WhatsApp Image 2022 01 19 at 8.25.28 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜே.வி.பி தலைமையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் இன்று!

Share

பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துவரும் நிலையில், ஜே.வி.பியும் பாரியதொரு போராட்டத்தை இன்று முன்னெடுக்கவுள்ளது.

இன்று 23 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு குறித்த போராட்டம் நுகேகொடையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெறும் இப்போராட்டத்தில் ஜே.வி.பி. சார்பு தொழிற்சங்கங்களும், மாணவர் அமைப்புகளும், மகளீர் அமைப்புகளும் பங்கேற்கவுள்ளன.

திருமலை எண்ணெய் குதங்கள் உட்பட தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை மீளப்பெறுமாறு வலியுறுத்தியும், நாட்டு மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ள அரசு பதவி விலக வேண்டும், இல்லையேல் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என அழுத்தம் பிரயோகித்துமே இப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...

Arrest 13
இலங்கை

இலகுவாக வீடு கட்டிக்கொள்ளலாம் – தவணைமுறையில் பணம் பெற்று பலரிடம் மோசடி செய்த நபர் கைது.

வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு நபர்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி...

எல் நினோ
இலங்கை

2027 ஏப்ரல் வரை நீடிக்கவுள்ள எல் நினோ தாக்கம்!

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின்...