paniU scaled
இலங்கைசெய்திகள்

யாழ். – கிளிநொச்சி மக்களுக்கு புதிய குடிதண்ணீர் திட்டங்கள்

Share

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் 24 ஆயிரம் மீற்றர் கணம் கொள்ளளவு கொண்ட சுத்தமான குடிதண்ணீர் வழங்கும் இரண்டு முக்கிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இத் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஒக்ரோபர் 6ஆம் யாழ்ப்பாணம் வருகை தந்து ஆரம்பித்து வைக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் 60 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஒரு திட்டமாக 5 ஆயிரம் குடும்ப பயனாளிகளுக்கு உப்பு நீரை சுத்திகரித்து குடிதண்ணீராக மாற்றும் (SWRO) தொகுதி மூலம் குடிதண்ணீர் வழங்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக யாழ்.நகரை மையமாகக் கொண்டு ஒரு லட்சம் மக்களுக்கு பயன்தரும் 284 கிலோமீற்றர் தூரம் கொண்ட மற்றொரு குடிதண்ணீர் திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு சுமார் 3 லட்சம் மக்கள் சுத்தமான குடிதண்ணீரை பெற ஏதுவாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...