FB IMG 1651029245707
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பிரதேச செயகத்தின் ஏற்பாட்டில் முதற்தடவையாக இப்தார் நிகழ்வு

Share

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதற்தடவையாக மாபெரும் இப்தார் நிகழ்வு நேற்று (2022.04.26) யாழ் பிரதேச செயலர் சாம்பசிவம் சுதர்சன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலக வரலாற்றில், முதற்தடவையாக இதுவே பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் முதலாவது மாபெரும் இப்தார் நிகழ்வு ஆகும். இவ் இப்தார் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் விசேட இப்தார் உரைகளை மௌலவி எம்.ஏ.பைசர் (மதனி – யாழ் மர்யம் மஸ்ஜித்), மௌலவி றழீம் (யாழ் புற நகர் மஸ்ஜித்) மற்றும் ஜனாப் எஸ்.எம். நிஸ்தாக் (யாழ் மாவட்ட முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர்) உள்ளிட்டோர் நிகழ்த்தியிருந்தனர்.

இவ் இப்தார் நிகழ்வில் யாழ். பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிககள், முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள், மகளிர் அமைப்புக்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், முஸ்லிம் வர்த்தகர்கள், முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள், இளைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரதேச செயலக வரலாற்றில் முதற்தடைவ இவ்வாறானதொரு இப்தார் ஏற்பாட்டை ஒழுங்கு செய்திருந்த பிரதேச செயலர் திரு.சாம்பசிவம் சுதர்சன் அவர்களுக்கு கலந்து கொண்ட முஸ்லிம் மக்கள் விசேடமாந நிகழ்வின் இறுதியில் தமது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமை விசேட அம்சமாகும்.

FB IMG 1651039305573 FB IMG 1651029258522 FB IMG 1651059249587 FB IMG 1651039300791 FB IMG 1651059265037 FB IMG 1651059290936 FB IMG 1651059261007 FB IMG 1651059270376

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...