யாழிலிருந்து சென்ற பேருந்து நள்ளிரவில் விபத்து
இலங்கைசெய்திகள்

யாழிலிருந்து சென்ற பேருந்து நள்ளிரவில் விபத்து

Share

யாழிலிருந்து சென்ற பேருந்து நள்ளிரவில் விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

மஹதிவுல்வெவ மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து அதிகாலை 2 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதியின் கவனக்குறைவால் திருகோணமலை மொரவ பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து – கதிர்காமத்திற்கு திருகோணமலை ஊடாக சுற்றுலா சென்ற பேருந்து இன்று (02.07.2023) அதிகாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த இளைஞரொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

அவருடைய இரு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் பரதன் (33 வயது) என்பவரே படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara dissanayake
இலங்கை

தூர நோக்குடன் வரவு செலவு திட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு.

  அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீட்டை வழங்கத்...

yositha
இலங்கை

யோஷிதவை வசமாக சிக்க வைத்த முன்னாள் காதலி!

மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...

லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...