நாடாளுமன்றம்
இலங்கைசெய்திகள்

அதிக விலைக்கு பொருள்கள் விற்பனை! – அபராதத் தொகை அதிகரிப்பு

Share

அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த அபராதத் தொகையை ஒரு லட்சமாக அதிகரிக்க வேண்டி சட்டத் திருத்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக அத்தியாவசியப் பொருள்களை விற்பனையாளர்கள் அதிகரித்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர் என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எதிர்வரும் புதன்கிழமை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சட்டவரைபின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

இந்த விவாதத்தின்போது அபராதத்தொகை தொடர்பான திருத்தம் முன்வைக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...