4 3
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Share

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவு தொடர்பாக முன்னாள் அரசாங்கம் கடைப்பிடித்த வினைத்திறன் இல்லாத நடைமுறையையே தற்போதைய அரசாங்கமும் கடைப்பிடித்து வருவதாகக் கிராம சேவகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக அந்தச் சங்கத்தினால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அஸ்வெசும கொடுப்பனவுக்கான பயனாளிகள் தெரிவின்போது, பிழையில்லாத பொறிமுறை ஒன்றைப் பின்பற்றுமாறு அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு சம்பந்தமான செயற்பாடுகளிலிருந்து கடந்த மே மாதம் 7ம் திகதிக்குப் பின்னர் கிராம சேவகர்கள் விலகிக் கொண்ட நிலையில்  அந்தப் பணிகள் தற்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் நாடளாவிய ரீதியில் பெருமளவான மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளைப் பதிவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைக் கையளிப்பதற்கும், நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அதிகளவான மக்கள் நுவரெலியா (Nuwaraeliya) பிரதேச சபை செயலகத்திற்கு முன்பாக கூடியிருந்தனர்.

இதனிடையே, அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு கிடைக்கப் பெறாத குடும்பங்கள் அல்லது தனிநபர் தங்களது குறைகளை அறிவிப்பதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
WhatsApp Image 2024 08 02 at 17.13.20
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பெற்றோருக்குச் சுமையற்ற, நவீன கல்வி முறை – ஜனாதிபதி அநுர குமார!

பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையையும், பிள்ளைகளுக்குத் துயரத்தையும் தராத ஒரு புதிய கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக...

images 2026 01 03t094503424 26244
உலகம்செய்திகள்

Grok AI-க்கு உலகளாவிய தடை மற்றும் கட்டுப்பாடுகள்: ‘டீப்ஃபேக்’ விவகாரத்தால் ஈலான் மஸ்க் பணிந்தார்!

ஈலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘Grok’ செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகச்...

MediaFile 8 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் ஊழல் நிறைந்தது: அமைச்சர் குமார ஜயகொடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால்!

தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி விலைமனுக் கோரலில் (Coal Tender) பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள...

1500x900 44538875 ipl2026
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல் 2026: சின்னசுவாமி மைதானத்திலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி! – ராஜஸ்தான் அணியும் இடம் மாறுகிறது.

ஐ.பி.எல் 2026 தொடரில் முன்னணி அணிகளான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்...