9 2
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு

Share

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு

நாட்டில் அஸ்வெசும பெறும் பெற்றோர்களது மற்றும் சிறுவர் இல்லங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த தீர்மானம் எதிர்வரும் பாடசாலை தவணையில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியின் பாதகமான விளைவுகளால், பாடசாலை மாணவர்களின் கல்வியில் கணிசமான எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், 55% பாடசாலை மாணவர்களின் கல்வியை அது மோசமாகப் பாதித்துள்ளதாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த சதவீதம் கிராமப்புற மற்றும் தோட்டப் பகுதிகளில் அதிகமாக உள்ளது.

இதேவேளை, 53.2% பாதிக்கப்பட்ட குழந்தைகள் பாடசாலை உபகரணங்கள் வாங்குவதை குறைத்துள்ளனர் என்பதுடன் 26.1% பாடசாலை உபகரணங்களை மீண்டும் பயன்படுத்துகின்றனர்.

எனவே, பாடசாலை மாணவர்களின் கல்வியில் ஏற்படும் பாதகமான தாக்கத்தை குறைக்கும் நோக்கில், 2025 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவை வழங்கவுள்ளார்.

அதன்படி, பின்தங்கிய குடும்பங்களின் குழந்தைகள், நிவாரணத் திட்டத்தில் சேர்க்கப்படாத அனாதைக் குழந்தைகள், விசேட தேவையுடைய தாய் அல்லது தந்தையைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், மற்றும் அனாதை இல்லங்களில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கான பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய 6,000 ரூபா உதவித்தொகையாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...